×

கடையை காலி செய்ய சொன்னவர் மீது தாக்குதல்

போடி, மே 12: தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரம் கரியப்பக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (55). இதே பகுதியை சேர்ந்தவவ் தங்கன். இவர், ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்திலுள்ள கடை ஒன்றை ஏலத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில், கண்ணன் கடையை காலி செய்யும்படி கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தங்கன், அவரது மனைவி அம்சமணி, மகன்கள் ஜெயக்குமார், தங்கமுத்து ஆகியோர் சேர்ந்து கண்ணனை ஆபாசமாக பேசி தாக்கினர்.

இதை தட்டி கேட்ட முத்து என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போடி போலீசார் தங்கன், அவரது மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடையை காலி செய்ய சொன்னவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Kannan ,Kariyapakkaundanpatti, Rasingapuram ,Theni district ,Thangan ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...