×

குளத்தூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்பு

குளத்தூர், மே12: குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘நான் முதல்வன்’ என்ற தலைப்பில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமை ஆசிரியர் சற்குணராஜ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழு தலைவர் ரமா, உறுப்பினர்கள் பேச்சிமுத்து, வேல்முருகன் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் கஸ்தூரிபாய் கருத்துரை ஆற்றியதோடு உயர் கல்வி தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

The post குளத்தூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Kulathur Govt School ,Kulathur ,Kulathur Government Higher Secondary School ,Headmaster ,Sargunaraj ,Rama ,School Management Committee ,Kulathur Government School ,Dinakaran ,
× RELATED குளத்தூரில் சிறுவர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்