×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தரணி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சிவகிரி, மே 12: வாசுதேவநல்லூரில் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மதுபாலா, டொனாடஸ் ராய் 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி வர்ஷினி 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஜனனி 481 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கணிதப்பாடத்தில் 5 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். 400மதிப்பெண்களுக்கு மேல் 30 மாணவர்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் பழனி பெரியசாமி, பள்ளி தாளாளர் ராமலிங்கம், பள்ளி முதல்வர் குழந்தை சாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தரணி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dharani Matric School ,Sivagiri ,Dharani Matric Higher Secondary School ,Vasudevanallur ,Madhubala ,Donatus Roy ,Varshini ,Dinakaran ,
× RELATED வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு...