×

நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து வெல்டரை வெட்டி வெடிகுண்டு வீச்சு

புதுச்சேரி, மே 12: புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து வெல்டரை சரமாரி அரிவாளால் வெட்டி, நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ், வெல்டர். இவரது 16 வயது அண்ணன் மகன், கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கில் அப்பகுதியில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த நிரஞ்சன்(18) என்பவர் அவரை நிறுத்தி இங்கு வேகமாக செல்லக்கூடாது என திட்டியுள்ளார். இதை தனது சித்தப்பா சத்தியராஜிடம், அவரது அண்ணன் மகன் தெரிவித்தார். உடனே சத்தியராஜ், நிரஞ்சனை அழைத்து கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த நிரஞ்சன், தனது நண்பர் பிரவீன் மூலம் நாட்டு வெடிகுண்டு தயாரித்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் சாணரப்பேட்டையில் உள்ள சத்தியராஜின் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். பின்னர் நாட்டு வெடிகுண்டையும் வீசினார். இதில் சத்தியராஜின் கைவிரல்கள் துண்டானது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சத்தியராஜை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்ஐ திருமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நிரஞ்சன், பிரவீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து வெல்டரை வெட்டி வெடிகுண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Pankaram ,Puducherry ,Mettupalayam ,Puducherry Mettupalayam Chanarappet ,Payangaram ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை