×

சம்பாதிப்பதற்காகவா அரசியலுக்கு வந்தேன்?… அமைச்சர் ரோஜா கேள்வி

திருமலை: ‘சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வந்தேனா?’ என எதிர் கட்சிகளுக்கு அமைச்சர் ரோஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார். ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தனது கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து அமைச்சர் ரோஜா பிரசாரம் செய்தார். பின்னர் அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது: பணம் சம்பாதிப்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். நான் சம்பாதிக்க அரசியலுக்கு வந்தேனா? அது முற்றிலும் தவறு. சம்பாதிப்பது எங்கள் நோக்கம் அல்ல.

அதற்காக அரசியலுக்கு வரவில்லை. சம்பாதிக்க வேண்டும் என விரும்பியிருந்தால் நானும் எனது கணவர் ஆர்.கே.செல்வமணியும் சினிமா துறையில் பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம். மக்களுக்காக உழைக்கவே அரசியலை தேர்வு செய்து பணியாற்றி வருகிறேன். 175 இடங்களிலும் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ஆட்சியை அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post சம்பாதிப்பதற்காகவா அரசியலுக்கு வந்தேன்?… அமைச்சர் ரோஜா கேள்வி appeared first on Dinakaran.

Tags : Minister ,Roja ,Tirumala ,RK Selvamani ,Nagari ,Chittoor district ,Andhra Pradesh ,Roja… ,Dinakaran ,
× RELATED ‘ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்’; நான்...