×

நாட்டின் விதியை மாற்றுங்கள்: தொண்டர்களுக்கு அகிலேஷ் அழைப்பு

லக்னோ: மக்களவை தேர்தல் மூலமாக நாட்டின் விதியை மாற்றுங்கள் என்று சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பதிவில் இந்தியில், ‘‘2024 மக்களவை தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலாகும். இந்த தேர்தலானது அரசியலமைப்பு, பொதுவுடைமை மதிப்புக்கள், இடஒதுக்கீடு மற்றும் கண்ணியம், பெருமை, கவுரவத்திற்கான ஒரு புதிய தேசிய இயக்கமாகும்.

எனவே இந்த தேர்தலில் கூடுதல் தீவிர ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது மற்றும் கோரப்படுகின்றது. நாடும், சமூகமும் உங்களை அழைக்கிறது. எழுச்சி பெறுங்கள். நாட்டின் விதியையும், எதிர்காலத்தையும் மாற்றுவதற்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகுங்கள். சமாஜ்வாதிகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டலுக்கும், அழுத்தத்துக்கும் அடிபணிய வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நாட்டின் விதியை மாற்றுங்கள்: தொண்டர்களுக்கு அகிலேஷ் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Akhilesh ,Lucknow ,Akhilesh Yadav ,Samajwadi Party ,Lok Sabha elections ,2024 Lok Sabha elections ,
× RELATED அரசியலமைப்பை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள்: அகிலேஷ்