×

பைக் மீது லாரி மோதியதில் மாநகராட்சி ஊழியர் பலி: மணலி காவல்நிலையம் மக்கள் முற்றுகை

திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(42). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக இருந்தார். நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்றார். ஈச்சங்குழி அருகே விச்சூர் சாலையில் வந்தபோது பின்னால் வந்த லாரி, அவரது பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி கதிர்வேல் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

கதிர்வேல் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கதிர்வேலுக்கு மனைவி இந்துமதி, லோகேஷ், யோகேஷ் ஆகிய மகன்கள் உள்ளனர்.இதனிடையே, சிறிய சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் திரண்டு மணலி புதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதன்காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.

 

The post பைக் மீது லாரி மோதியதில் மாநகராட்சி ஊழியர் பலி: மணலி காவல்நிலையம் மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Manali ,police station ,Thiruvotiyur ,Kathirvel ,Vichur ,Manali Pudunagar, Chennai ,Chennai Municipality ,Vichur Road ,Eichanguzhi ,Manali Police Station ,
× RELATED மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட...