×

ஜூலை 2ம் தேதி பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு

 


சென்னை: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 2ல் நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்காக ஜூலை 2ம் தேதி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வி படிக்க தகுதியுடையவராவர். துணைத் தேர்வுக்கான கால அட்டவணை நாளை வெளியிடப்படும். மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தேவையான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் உள்ள இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதி விடைத்தாள் நகல் கோரி 15ம் தேதி முதல் 20ம் தேதிவரை, தாங்கள் படித்த பள்ளியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

The post ஜூலை 2ம் தேதி பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்