×

குளத்தூர் அருகே மரக்கன்று நடும்விழா மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு

குளத்தூர்,மே 11: விளாத்திகுளத்தை தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மரங்கள் மக்கள் இயக்கம் விளாத்திகுளம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியினை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மரங்கள் மக்கள் இயக்கத்தின் சார்பில் குளத்தூர் அருகே உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் மரக்கன்று நடுவிழா நடந்தது. விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து மரங்கள் குறித்த நன்மைகள், மரக்கன்றுகளை எவ்வாறு பராமரிப்பது, அதனால் உண்டாகும் பலன்கள் குறித்து பேசினார். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், குளத்தூர் கிளை செயலாளர் முருகேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post குளத்தூர் அருகே மரக்கன்று நடும்விழா மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Markandeyan MLA ,Kulathur ,Trees People's Movement ,Vlathikulam ,Dinakaran ,
× RELATED குளத்தூர் அரசு பள்ளியில் பிளஸ் 2...