×

பெருஞ்சாணியில் 56.6 மி.மீ மழை பதிவு குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைகிறது

நாகர்கோவில், மே 11: குமரி மாவட்டத்தில் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்திருந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்திருந்தது. குமரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இருப்பினும் பிற்பகல் வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்றும் மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் வில்லுக்குறி உட்பட ஒரு சில இடங்களில் மழை பெய்திருந்தது.

மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 56.6 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.22 அடியாகும். அணைக்கு 196 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.35 அடியாகும். அணைக்கு 91 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 21 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 9.28 அடியும், சிற்றார்-2ல் 9.38 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.70, மாம்பழத்துறையாறு அணையில் 14.93, முக்கடல் 1.80 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது.
மழையளவு (மி.மீ)
கன்னிமார்: 3.6
பெருஞ்சாணி: 56.6
புத்தன் அணை: 54.8
சுருளோடு: 41.2
இரணியல்: 4
பாலமோர்: 7.2
மாம்பழத்துறையாறு: 9
அடையாமடை: 47.2
ஆனைக்கிடங்கு: 8

The post பெருஞ்சாணியில் 56.6 மி.மீ மழை பதிவு குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைகிறது appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Perujani ,Nagercoil ,Dinakaran ,
× RELATED இளம்பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி