×

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்தப் பொறுப்பில் அளித்த ரூ5 கோடி ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையைக் கொண்டு மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவி தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வைப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ5 கோடி ரூபாயில் 30வது புத்தகக் கண்காட்சியை கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கலைஞர் திறந்து வைத்துப் பேசியதில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ரூ1 கோடி வழங்கப்படும் என அறிவித்து அந்தச் சங்கத்திற்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் கடந்த 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ5 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரமாகும். அதன்படி, இம் மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு ரூ25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ2 லட்சத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Artist Karunanidhi Foundation ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Artist Karunanidhi Trust ,.Stalin ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...