×

விபத்தில் சிக்கிய காரில் 372 கிலோ குட்கா பறிமுதல்

நாமக்கல், மே 10: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கிய காரில் 372 கிலோ குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். நாமக்கல் அருகே கருப்பட்டிபாளையம் பிரிவு சாலை பகுதியில் நேற்று காலை விபத்தில் சிக்கிய கார் ஒன்று சாலையோரமாக நின்று கொண்டிருந்தது. தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார், அங்கு சென்று காரில் சோதனை நடத்தினார்கள். அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 372 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காருடன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post விபத்தில் சிக்கிய காரில் 372 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Gutka ,Karupattipalayam ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!