×

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரம் அருகே மழை வர வேண்டி சிறப்பு யாக பூஜை…

நாமக்கல்: தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் நீரின்றி வறட்சியாக காணப்படுகிறது.இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பரப்பிபட்டி பகுதியில் உள்ள ஶ்ரீ சுப்பிரமணிய கோயில் மழை வர வேண்டி சிறப்பு யாக பூஜை ஆனது நடைபெற்றது.

யாக பூஜையில் வருண யாங்கள், வர்ண ஜெயம் ,லட்சுமி ஹோமம்,குபேர ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ,சுப்பிரமணியர் மூல மந்திர ஹோமம்,வருண பகவானுக்கு மழை வேண்டி பல்வேறு ஹோமம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பூஜை,சப்த கன்னிமார் பூஜைகள் நடைபெற்றது.

இறுதியாக மழை வர வேண்டி சிவாச்சாரியார்கள் 2 மணி நேரம் நீரில் அமர்ந்து வர்ண ஜெபத்தினை நடத்தினர்.பூஜையில் மழை வர வேண்டி பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருள் பெற்று சென்றனர்.

The post தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரம் அருகே மழை வர வேண்டி சிறப்பு யாக பூஜை… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rasipuram ,Namakkal ,Shri Subramaniya ,Temple ,Ponbarabipatty ,Venantur ,Union ,Namakkal District Rasipuram ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...