சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். பாளையங்கோட்டை, கரூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. திருவள்ளூரில் வெயில் தாக்கம் வெகுவாக குறைந்து இன்று 99 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கிய மே 4-ல் தருமபுரியில் 106 டிகிரி பதிவான வெயில் தற்போது 95 டிகிரி ஃபாரன்ஹீட் கீழ் சென்றது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.