×

முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது

ஈரோடு: முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். பெருந்துறை ஆடை நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டவர், காங்கேயம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பேசுவதாக கூறியுள்ளார். பணம் கேட்டதால், ரூ.50,000ஐ ஆடை நிறுவன உரிமையாளர் தன் உதவியாளர் மூலம் ஜிபேயில் அனுப்பி வைத்துள்ளார். காங்கேயம் முன்னாள் எம்எல்ஏவை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் பணம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆடை நிறுவன உரிமையாளர் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

The post முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai ,Kangeyam ,AIADMK ,MLA ,Dinakaran ,
× RELATED திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு