×

சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்!: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டம்..!!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் பயணிகள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கொருக்குப்பேட்டை பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் புறநகர் ரயில்கள் கொருக்குப்பேட்டை அருகே நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கோளாறு சரிசெய்யப்படாததால் ரயில் பயணிகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காலையில் பணிக்கு செல்லும் ரயில் பயணிகள் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் வேதனையடைந்தனர். தொடர்ந்து, மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் பயணிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அட்டவணைப்படி மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்!: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED 5ம் கட்ட மக்களவை தேர்தல் 49 தொகுதிகளில்...