×

ஸ்ரீபெரும்புதூரில் மினி பேருந்து மோதி பரோட்டா மாஸ்டர் பரிதாப பலி

ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் (57). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், பரோட்டா மாஸ்டர் திருவேங்கடம் நேற்று சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பென்னலூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிவந்த மினி பேருந்து, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், திருவேங்கடத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய தனியார் மினி பேருந்து ஓட்டுநர் ஜெயக்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் மினி பேருந்து மோதி பரோட்டா மாஸ்டர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Barotta master ,Sriperumbudur ,Thiruvenkadam ,Tiruvallur district ,Irungattukottai, Kanchipuram district ,Barotta Master Thiruvenkadam ,Chennai-Bengaluru National Highway ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...