×

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் தனிப்படை காவல் ஆய்வாளர் கண்ணன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த 4-ம் தேதி அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார். ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலரது பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Congress Committee ,President ,Thangabalu ,Nellai East District Congress ,Jayakumar ,Nellai ,Kannan ,Jayakumar Thanasingh ,Dinakaran ,
× RELATED மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளும்...