×

பெரம்ப லூர் மாவட்டம் 96.44 சதவீதம் தேர்ச்சி; பிளஸ்2 தேர்வு முடிவு; அரியலூர் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம்

அரியலூர், மே7: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு ; நடந்து முடிந்த மார்ச் 2024 இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவ மற்றும் மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3917 மாணவர்களும், 4301 மாணவிகளும் தேர்வு எழுதினர். 54 அரசு பள்ளிகளில் 2323 மாணவர்களும், 2214 மாணவிகளும் ஆக மொத்தம் 4537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2199 மாணவர்களும், 2138 மாணவிகளும் ஆக மொத்தம் 4337 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 .9 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 538 மாணவர்களும், 863 மாணவிகளும் ஆக மொத்தம் 1401 பேர் தேர்வு எழுதினர். இதில் 538 மாணவர்களும், 863 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 100 .2 அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 39 மாணவர்களும், 40 மாணவிகளும் ஆக மொத்தம் 79 பேர் தேர்வு எழுதினர். இதில் 39 மாணவர்களும், 40 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் 100 .16 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 737 மாணவர்களும், 635 மாணவிகளும் ஆக மொத்தம் 1372 பேர் தேர்வு எழுதினர். இதில் 736 மாணவர்களும், 635 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.93 .9 சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 155 மாணவர்களும், 73 மாணவிகளும் ஆக மொத்தம் 228 பேர் தேர்வு எழுதினர். இதில் 155 மாணவர்களும், 73 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 .அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.25 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி – 23, அரசு உதவிபெறும் பள்ளி 6, மெட்ரிக் பள்ளி 15, சுயநிதி பள்ளி 9 ஆக மொத்தம் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, பொன்னாடை அணிவித்து, வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

The post பெரம்ப லூர் மாவட்டம் 96.44 சதவீதம் தேர்ச்சி; பிளஸ்2 தேர்வு முடிவு; அரியலூர் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,Ariyalur district ,Ariyalur ,Collector ,Annie Mary Swarna ,Peramba Lur district ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!!