×

கரும்பு நடவில் விவசாயிகள் ஆர்வம்

 

மதுரை, மே 6: தமிழக அரசு பொங்கலுக்கு வழங்கும் விலையில்லா கரும்புகள் அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி தாதன்குளம், சிட்டுலொட்டி, முருகனேரி, கோபிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு கூடுதல் பரப்பில் நடவு பணிகள் நடைபெற உள்ளது.

இந்த கரும்பு உற்பத்தியில் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கிறது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், ‘‘கரும்பு நடவு பணிகள் துவங்கியுள்ளன. கடந்தாண்டு விளைச்சலும், விலையும் அதிகம் கிடைத்தது. இந்தாண்டும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து, கூடுதல் பரப்பில் அதிக விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்’’ என்றனர்.

The post கரும்பு நடவில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu government ,Pongal ,Madurai district ,Dadankulam ,Situlotti ,Muruganeri ,Gopinayakanpatti ,
× RELATED போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு...