×

கடமலைக்குண்டு அருகே மயானத்தில் அடிப்படை வசதி வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

வருசநாடு, மே 5: கடமலைக்குண்டு அருகே கிராம பொது மயானத்தில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே சிதம்பரம் விலக்கு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கிராம பொது மயானத்தில் எரியூட்டும் கொட்டகை, தடுப்புச்சுவர், காத்திருப்போர் அறை, தெருவிளக்கு, குடிநீர்வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை.

அடிப்படை வசதி செய்து தர கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக, இறந்த உறவினர்களின் உடல்களை எரியூட்டவும், புதைக்கவும் மயானத்திற்கு வருவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கடமலைக்குண்டு அருகே மயானத்தில் அடிப்படை வசதி வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mayanah ,Yarasanadu ,Khamalai ,Chidambaram Wilakku village ,Kadamalakundu ,Theni district ,Dinakaran ,
× RELATED வருசநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான...