புதுக்கோட்டை, மே 4: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி குருந்தடிப்புஞ்சையில் உள்ள மின்மாற்றியில் இருந்து அப்பகுதியில் கின்று, ஆழ்துளை மின்மோட்டார்களை இயக்கி சுமார் 200 ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கும் அந்த மின்மாற்றியில் இருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை மும்முனை மின்சாரம் இருந்தபோது அனைத்து மின் மோட்டார்களும் இயக்கப்பட்டு வந்தன. திடீரென மின்மாற்றி வெடித்தது.
அதில் இருந்த ஆயில் வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. மின்மாற்றி முழுவதும் மளமளவென எரிந்து அடங்கியது. கரும்புகையாக திரண்டு காணப்பட்டது .அருகே காய்ந்த மரங்கள், செடிகள் இல்லாதாதல் மற்ற இடங்களுக்கு தீ பரவவில்லை. கடுமையான வெயிலினால் மின்மாற்றி வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பழுதடைந்துள்ள மின்மாற்றியை விரைந்து சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post புதுகை அருகே வடகாட்டில் மின் மாற்றி வெடித்து தீயில் எரிந்து சேதம் appeared first on Dinakaran.