×

டூவீலர் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பலி

போச்சம்பள்ளி, ஏப்.27: கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டு சூளகரை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் மேகநாதன் (28), அஜித்குமார்(28). இருவரும் நேற்று முன்தினம் மாலை, டூவீலரில் போச்சம்பள்ளிக்கு சென்றனர். பின்னர், இருவரும் சொந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது சிப்காட் அருகே வந்த போது பின்னால் வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியது. இதில் தலைநசுங்கி மேகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஜித்குமார் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அஜித்குமாரை மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேகநாதன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Meghnathan ,Ajithkumar ,Mettu Sulagarai ,Krishnagiri district ,Pochampalli ,Sipkot ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...