×

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சேந்தமங்கலம், ஏப்.26: எருமப்பட்டி அடுத்த பவித்திரம் கிராமத்தில், பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. எருமப்பட்டி வட்டாரம், பவித்திரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், வேளாண்மை நலத்துறையின் சார்பில், உலக பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டம், பேரணி நடைபெற்றது. இதில் துறையூர் இமயம் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள், கிராம அனுபவ திட்டத்தில் மூலம், பவித்திரம் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். பின்னர், பேரணி நடைபெற்றது. பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். பேரணியின் போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Environment Protection Awareness Rally ,Senthamangalam ,Bavithram ,Erumapatti ,Earth Day ,World Earth Day ,Bavithram village ,Department of Agriculture and Welfare ,Environmental Protection Awareness Rally ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை