ஹாசன்: மண்டியா தொகுதியில் நடந்த பிரசாரத்தில், மக்களவை தேர்தலுக்காக சுமலதா ஒத்துழைக்கவில்லை என தேவகவுடா வேதனையுடன் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் ஹாசனில் முன்னாள் பிரதமரும், மஜத தலைவருமான எச்.டி.தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பாஜவினர் சிலர், பிரசாரத்துக்கு ஒத்துழைக்கவில்லை. ஹாசனில் பாஜவை சேர்ந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பேசப்படுகிறது. அதேபோல் மண்டியாவில் சுமலதா ஒத்துழைக்கவில்லை. இதனால் எங்களது கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. காவிரிப் படுகையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மாநிலத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் பேசியுள்ளேன்’ என்றார்.
The post பிரசாரத்திற்கு பாஜ, சுமலதா ஒத்துழைக்கவில்லை: தேவகவுடா வேதனை appeared first on Dinakaran.