×

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தஞ்சை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அய்யம்பேட்டை அருகே மானங்கோரை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் விழுந்த வாய்க்காலில் பேருந்தானது , கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து உடனடியாக அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் தஞ்சாவூரை சேர்ந்த 50 வயதான லட்சுமி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur district ,Kumbakonam ,Kumbakonam, Thanjavur district ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...