×

இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு

ராமேஸ்வரம்: கர்நாடக மாநிலம், பெங்களூரூவை சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் நீச்சல் பயிற்சிக்காக நேற்று முன்தினம் காலை ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே நீந்திச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக நேற்று முன்தினம் காலை ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து இரண்டு படகுகளில் கடலுக்குள் புறப்பட்டு சென்றனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் தலைமன்னாரில் இருந்து நீந்துவதற்கு அனைவரும் தயாராகினர். அப்போது கோபால்ராவ் (78) என்பவர் திடீரென மயங்கி படகில் விழுந்தார். படகில் இருந்த மருத்துவர் அவரை சோதனை செய்ததில் இறந்தது தெரியவந்தது.

The post இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Rameswaram ,Bengaluru, ,Karnataka ,Rameswaram ,Sri Lanka ,Thalaimannar ,Dhanushkodi ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி