×

பாட்னா சாஹிப் தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து மீரா குமாரின் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாட்னா சாஹிப் தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரின் மகன் அன்ஷூல் அவிஜித்தை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் ஜூன் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதி பாஜவின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்கு 2009, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் 55 சதவீத வாக்குகளை பெற்ற பாஜ 2019 தேர்தலில் 60 சதவீத வாக்குகளை வென்றது.

2009, 2014ம் ஆண்டுகளில் சத்ருஹன் சின்கா போட்டியிட்ட பாட்னா சாஹிப்பில் 2019ம் ஆண்டு வெற்றி பெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வரும் தேர்தலிலும் அதேதொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரின் மகன் டாக்டர். அன்ஷூல் அவிஜித் பாட்னா சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

The post பாட்னா சாஹிப் தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து மீரா குமாரின் மகனை களமிறக்கியது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Meera Kumar ,Ravi Shankar Prasad ,Patna Sahib ,New Delhi ,Anshul Avijit ,Lok Sabha ,Speaker ,Meira Kumar ,Bihar ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...