×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: ேபாலீசார் விசாரணை

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம் பெண் ஒருவர் அமர்ந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் முதல் தளத்தில் உள்ள அறையை சுத்தம் செய்ய சென்ற போது, வட மாநில இளம் பெண் ஒருவர் அமர்ந்த நிலையில் அசைவின்றி இருந்தார். இதை பார்த்த துப்புரவு பணியாளர்கள், உடனே ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் வந்து பார்த்த போது, அவர், அமர்ந்த நிலையில் மர்மமான முறையில் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளம் பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே போலீசார் இறந்த இளம் பெண் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், இவர் இங்கு எப்படி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், இளம் பெண் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், இது தற்கொலையா அல்லது கொலையா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: ேபாலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Central Railway Station ,Nepal ,CHENNAI ,Northern State ,Chennai Central Railway Station ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!