- பெரவூரணி நீலகண்டா பிள்ளையார் கோயில் தேர்
- பேராவூரணி
- நீலகண்டப் பிள்ளையார்
- சரியோதம்
- பேரவூராணி நீலகண்டா பிள்ளையார் கோயில் தேரோட்டம்
பேராவூரணி, ஏப், 23:பேராவூரணி பகுதியில் பிரசித்தி பெற்ற நீலகண்டப் பிள்ளையார் கோயில் சித்ராபவுர்ணமி 12 நாள் திருவிழா கடந்த 14ம்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 9ம் நாள், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது . தேரோட்டத்தையொட்டி அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
தேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர் . தேரில் உற்சவர் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்தார். விழாவையொட்டி பேராவூரணி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்வேறு இடங்களில் அன்னதானம்,தண்ணீர் பந்தல் வைத்து குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
The post பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.