×

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்: வனத்துறை அறிவுறுத்தல்

கோவை: வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும்.ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று, அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பக்தர்களுக்கான அறிவுரைகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாகவே செல்ல வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்தபிறகே மலையேற வேண்டும். வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்; மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தி வருகிறது.

 

The post வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்: வனத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Velliangiri hill ,Coimbatore ,Velliangiri hills ,Coimbatore district ,Shiva ,temple ,
× RELATED கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...