×

திருவாடானையில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாடானை, ஏப். 21: திருவாடானையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பேருந்து நிலையம் பகுதி, ஆட்டோ ஸ்டாண்ட், தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தீயணைப்பு வீரர்கள் தொண்டி பேரூராட்சி பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து போலி ஒத்திகை பயிற்சிகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post திருவாடானையில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : day ,Thiruvadanai ,Fire and Rescue Department ,Veerapandi ,Charity Day ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் ஆபத்தான கழிவுநீர் தொட்டி