×

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் : கவிப்பேரரசுவைரமுத்து வாழ்த்து!!

சென்னை : இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. சென்னையில் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மக்களவைத் தேர்தல் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,

மக்கள் வெள்ளம்
மணியான பேச்சு

துருப்பிடிக்காத உற்சாகம்
தகர்க்க முடியாத தர்க்கம்

சொல்லியடித்த புள்ளிவிவரம்
சோர்ந்துவிடாத உடல்மொழி

தற்புகழ் கழிந்த உரை
தமிழர்மீது அக்கறை

இந்தத் தேர்தல் களத்தின்
ஆட்ட நாயகன்
முதலமைச்சர்தான்
முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின்தான்

ஒரு பூங்கொத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் : கவிப்பேரரசுவைரமுத்து வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kavipperarasawairamuthu ,Chennai ,Mutuel Karunanidhi Stalin ,Muthwael Karunanidhi Stalin ,Tamil Nadu ,Puducherry ,Kaviperarasawairamuthu ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...