×

வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்

மோகனூர், ஏப்.20: நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். இந்நிலையில், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பள்ளி ஊராட்சியில் உள்ள 195 எண் கொண்ட வாக்குச்சாவடியில், 783 அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை தொடங்கிய வாக்கு பதிவில் 334 வாக்குகள் பதிவானது. பிற்பகல் 12.40 மணிக்கு இவிஎம் மெஷின் இயங்காமல் போனது, இதனையடுத்து உடனடியாக மாற்று மெஷின் பொறுத்தப்பட்டன. அதுவும் இயங்காததால் 3வதாக வேறோரு மிஷின் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது. இதனால் சுமார் சுமார் 40 நிமிடம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

The post வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Namakkal parliamentary election ,Manapalli panchayat ,Paramathivelur ,Dinakaran ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு