×

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மலர் தொட்டிகள் கொண்டு அலங்காரம்

 

ஊட்டி, ஏப். 20: 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகள் கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை கொண்டு பேரணி நடத்தப்பட்டும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் உள்ளூர் மக்கள் மற்றும் சுறு்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், மலர் தொட்டிகள் கொண்டு ‘ஏப்ரல் 19 வோட் 100’ என ஆங்கிலத்தில் மலர் தொட்டிகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பூங்காவிற்கு வந்த பலரும் இதனை புகைப்படம் எடுத்து சென்றனர்.

 

The post 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மலர் தொட்டிகள் கொண்டு அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,18TH PARLIAMENTARY ELECTION ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED களைகட்டிய பைன் பாரஸ்ட்