- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தலைமை தேர்தல் அதிகாரி
- சத்யபிரதா சகு
- கேரளா
- கர்நாடக
- ஆந்திரா
- தெலுங்கானா
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி: தமிழகத்தின் எல்லை பகுதியான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பறக்கும் படை சோதனை ஜூன் 4ம் தேதி வரை நடைபெறும். இந்த பகுதியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அதற்கு மேல் எடுத்துச் சென்றால் முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் மற்ற பகுதியில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு குழு வாபஸ் பெறப்படும். இதுகுறித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
The post தமிழகத்தின் உள்பகுதியில் பறக்கும் படை இன்று முதல் வாபஸ் appeared first on Dinakaran.