×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினமும் அதிகரித்து புதிய உச்சம் கண்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,960க்கு விற்பனையானது. இது தங்கம் வரலாற்றில் உச்சப்பட்ச விலையாகும். அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கிடையில் 17ம் தேதி எந்தவித மாற்றமும் இல்லாமல், முந்தைய நாள் விலையிலேயே விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,835க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680க்கும் விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,890க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் உச்சப்பட்சமாகும். இது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sawaran ,CHENNAI ,Savaran ,Dinakaran ,
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...