×

தங்கம் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை: அட்சயதிரிதியை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இந்தாண்டு அட்சய திருதியை 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதை 3 நாட்கள் கொண்டாட நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தங்கம் விலை கடந்த 3ம் தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 4ம் தேதி ரூ.120 குறைந்து சவரன் ரூ.52,800க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்தது.

இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 6ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,610க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.52,880க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,640க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,120க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Akshayatrithi ,Akshay Trithi ,Dinakaran ,
× RELATED அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அட்சய திருதியை