×

மக்களவை தேர்தலில் தலையிட முயற்சி மே.வங்க ஆளுநர் மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் புகார்

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் மக்களவை தேர்தலில் தலையிட முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் முதற்கட்ட வாக்குப் பதிவு நடக்கும் கூச்பெஹார் தொகுதிக்கு இன்றும், நாளையும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு அவர் செல்ல வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி இருந்தது.

இதையடுத்து, ஆளுநர் ஆனந்தபோஸ் தனது பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில் மேற்குவங்க ஆளுநர் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்த புகாரில், “தேர்தல் நடத்தை விதிகளை வாக்குப் பதிவு நடக்கும் பகுதிகளுக்கு ஆளுநர் செல்ல முயற்சி செய்கிறார். மக்களவை தேர்தலில் மீண்டும், மீண்டும் தலையிட முயல்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தலில் தலையிட முயற்சி மே.வங்க ஆளுநர் மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் புகார் appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Election Commission ,Bengal ,Governor ,Lok Sabha ,Kolkata ,Trinamool Congress ,West ,Lok ,Sabha ,CV ,Ananthabose ,Coochbehar ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...