×

பாலியல் வழக்கில் தண்டனையை நிறுத்தக்கோரி ராஜேஷ் தாஸ் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: கடந்த 2021ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிசிஐடி சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ராஜேஷ் தாசுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கூடாது. சரணடைய விலக்களிக்கவும் கூடாது. காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்குமாறு ராஜேஷ் தாஸ் கூறுகிறார். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயர் அதிகாரி தான் என்றார். ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி அவருக்கு எதிராக சதி செய்து பொய் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

The post பாலியல் வழக்கில் தண்டனையை நிறுத்தக்கோரி ராஜேஷ் தாஸ் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Rajesh Das ,Chennai ,Villupuram Criminal Arbitration Court ,Special ,Villupuram Principal Sessions Court ,Rajesh Das' ,Dinakaran ,
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...