×

மதுரையில் மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை..!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் கார்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை காமராஜர் நகரில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஆர்.பி.உதயகுமார் வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என குறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க 50,000 மேல் ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாகனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. தேனி தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கணூர் ,கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பரப்புரைக்கு வந்த முன்னாள் எம்எல்ஏக்களின் வாகனங்களையும் இடைமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

The post மதுரையில் மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Maji ,Minister ,Udayakumar ,Theni ,Supreme ,Former Minister ,R. B. ,Narayanasamy ,Madurai Kamaraj ,Theni Constituency Supreme Candidate ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை