×

பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்

புதுச்சேரி, ஏப். 16: பாசிசவாதிகளை விரட்ட வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறினார். இது குறித்து அவர் பேசுகையில், இந்த தேர்தல் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் நடைபெறுகிற தேர்தல். நாம் 2வது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். நமது ஆட்சியில் ரேஷன் கடைகள் இருந்தன. இவர்களது ஆட்சியில் ரேஷன் கடைகள் எங்கே போனது. வந்தாரை வாழ வைக்கும் மாநிலமாக இருந்த புதுச்சேரியில், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத மாநிலமாக இன்றைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து 20 ஆயிரம் ரேஷன் அட்டைகள், தமிழகத்துக்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. 1952 முதல் எந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்தாலும் அதை காங்கிரஸ் நிறைவேற்றி இருக்கிறது. சொல்லாததையும் செய்து இருக்கிறோம். கல்வி உரிமை, தகவல் உரிமை போன்ற அற்புதமான திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது. எந்த வாக்குறுதியையும் மோடி நிறைவேற்றவில்லை. இருந்த வேலை வாய்ப்பும் போய்விட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலரப் போகிறது. இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது. இதுவரை பட்டதெல்லாம் போதும். இந்த பாசிசவாதிகளை நாட்டில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் விரட்ட வேண்டும். அதானி, அம்பானி போன்றவர்களுக்கு மத்தியில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் வைத்திலிங்கம் வெற்றிபெறுவதை, மக்களின் வெற்றியாக பார்க்க வேண்டும். காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு பாஜகவில் இணைந்திருக்கும் சந்தர்ப்பவாத சக்திகளை நாம் அடையாளம் காட்ட வேண்டும். இதற்கு வைத்திலிங்கம் கடந்த தேர்தலைவிட 2 மடங்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பாசிசவாதிகளை விரட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Tamil Nadu Congress ,Selva Perundagai ,Puducherry Congress election ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி