×

250 ரயில்வே ஊழியர்கள் கைது

அண்ணாநகர்: ஐசிஎப் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் அப்ரண்டீஸ் ஊழியர்கள் 250க்கும் மேற்பட்டோர், பணிமூப்பு அடிப்படையில் தங்களை பணி நிரந்தரம் செய்யாமல், வடமாநில வாலிபர்களுக்கு பணியினை வழங்குவதாகவும், இதுகுறித்து ரயில்வே துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, கோயம்பேட்டில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து, தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தங்களது வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க நேற்று வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.

The post 250 ரயில்வே ஊழியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,ICF ,Central Railway Station ,Northern State ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!