×

வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள்: தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!!

சென்னை: வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள். மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக இறங்கி நம்மை பற்றி பொய் பரப்புரை செய்கிறது. அதிமுகவின் ஆற்றலும், தொண்டர் பலத்தையும் பற்றி பாஜகவுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்.

‘எனக்கு பின்னாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’: எடப்பாடி பழனிசாமி
எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூறாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்.
துவளாமல், அஞ்சாமல், அயராமல் வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு தேர்தல் பணியாற்ற இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். வம்பு சண்டைக்கு போவதில்லை; வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள்; நமது அமைதியும் சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே. இவ்வாறு இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

The post வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள்: தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,BJP ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்