டெல்லி: தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் சீரழிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மோடி ஆட்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மோடி ஆட்சிக்கு முன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு சிறந்து விளங்கியது. மோடி பிரதமராவதற்கு முன் சிறு, குறு தொழில்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. பணமதிப்பு ரத்து, ஜிஎஸ்டி, திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்கள் சிதைந்தன.
The post தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் சீரழிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.