×

தேர்தல் பணி அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்

தர்மபுரி: தர்மபுரியில், தேர்தல் பணி அலுவலர்கள் 33 பேர் தபால் வாக்குகளை செலுத்தினர். இன்றும் தபால் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பிற நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுள்ள அலுவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, நேற்று முன்தினம்(13ம் தேதி) பிற்பகல் 3 மணி முதல் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆர்வத்துடன் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து, இன்று(15ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காவல்துறை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த 13ம் தேதி வாக்களிக்க இயலாதவர்களும் சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் தபால் வாக்குகள் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு நிகழ்வுகளை தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 33 பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.

The post தேர்தல் பணி அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி