- மோடி
- நெல்லா
- மக்களவைத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாயனார் நாகேந்திரன்
- கன்னியாகுமாரி பொன்ராதகிருஷ்ணன்
- தூத்துக்குடி
- Tamaka
- STR
- தின மலர்
தமிழகத்தில் மக்களவைத்தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு 4 நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பொன்ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், தென்காசி தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன் ஆகியோரை ஆதரித்து பிரதமர்மோடி இன்று (15ம் தேதி) பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்காக ெஹலிகாப்டர் மூலம் அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்யொட்டி ஏற்கனவே 7 முறை தமிழ்நாட்டுக்கு வந்து உள்ள பிரதமர் மோடி, இன்று 8வது முறையாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
தமிழ்நாட்டில் பாஜவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் வெளியானதால், டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற ஆசையில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் வரிசையாக படையெடுத்தனர்.
ரோடு ஷோ மற்றும் பிரசார கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் பாஜவினர் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வராததால் வயதானவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்களை தேடி தேடி கண்டு பிடித்து பணம் கொடுத்து அழைத்து வந்தனர். பாஜவினர் முன்னெடுத்த அனைத்து யுக்திகளும் புஷ்வானமாக போனது. ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் பிரசாரத்தை முடித்த நிலையில், இறுதியாக பிரதமர் மோடி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
The post 8வது முறையாக மீண்டும் வருகை; பிரதமர் மோடி இன்று நெல்லையில் பிரசாரம் appeared first on Dinakaran.