×

குரோதி வருட தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் இது: காங். தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: குரோதி வருட தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் இது என காங்கிரஸ் . தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை தலைமுறை தலைமுறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமீப காலமாக தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சார, பண்பாட்டின் மீதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கடுமையான படையெடுப்பை நடத்தி வருகிறது. இதனைத் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் மூலமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் சீர்குலைவு செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதை ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன.

இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.நேற்றைய தினம் தலைவர் ராகுல்காந்தி நெல்லை, கோவை பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போது தமிழர்களின் தொன்மையான நாகரீகம், பண்பாடு, தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவை குறித்து பெருமையாக பேசியது தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் தனித்தன்மையை பாதுகாக்க தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்தாலும், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post குரோதி வருட தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் இது: காங். தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ் புத்தாண்டு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kurothi Year Tamil New Year ,President ,Selvaperunthakai ,Year ,CHENNAI ,Congress ,Tamil New Year ,Kurothi ,
× RELATED வெறுப்பு பேச்சுகளை பிரதமர் மோடி...