×

சித்திரை விசுவையொட்டி வெள்ளரிப்பழம் விற்பனை விறுவிறுப்பு

*வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவழைக்கு பிறகு பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் நல்ல விளைச்சல் அடைந்ததும் அறுவடை செய்யப்படுகிறது. இதில், வடக்கிபாளையம், புரவிபாளையம், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், கோமங்கலம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும், வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

அதிலும், சித்திரை விசுவையொட்டி பூஜை வழிபாட்டிற்கு வைக்கப்படும் காய், பழங்களில் வெள்ளிரிப்பழமும் ஒன்று என்பதால் வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பல கிராமங்களில் வெள்ளரி சாகுபடி அதிகளவில் இருந்தது. அதிலும், கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கத்தால், அந்த வெள்ளரிகள், சித்திரை விசுவுக்கு பயன்படுத்தும் படியாக நல்ல விளைச்சலடைந்து பழுத்த நிலையடைந்தது.

இதையடுத்து, சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு வெள்ளரிப்பழத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து அறுவடை செய்து, மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். நாளை சித்திரை விசு என்பதால், மார்க்கெட்டில் விற்பனைக்காக அதிகளவு வெள்ளரிப்பழம் குவிக்கப்பட்டிருந்தது. மேலும், வெள்ளரிப்பழம் விரைந்து விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் வெள்ளரிப்பழம் வரத்து அதிகரிப்பால், விலை சற்று குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post சித்திரை விசுவையொட்டி வெள்ளரிப்பழம் விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Vadakipalayam ,Puravipalayam ,D. Nallikaundanpalayam ,Zameen ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...