நாகர்கோவில்: காங்கிரஸ் ஊடக பிரிவின் மாநில தலைவரும், பொருளாதார வல்லுநருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் நாகர்கோவிலில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இந்து இந்து என சொல்லும் மோடி கற்பகிரகத்தில் பூஜை செய்பவர்களின் பணத்தை கொள்ளை அடித்தவருக்கு சிவகங்கையில் சீட்டு கொடுத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக அண்ணாமலை குரல் கொடுக்கவில்லை.
அப்படி என்றால் மற்ற இந்துக்களின் கதி என்ன என்று நினைத்து பாருங்கள். தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். வட மாநிலங்களில் நிலைமை மாறிவிட்டது. மகாராஷ்டிரா, பீகார், அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாஜ தோற்கும். வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.8300 வழங்கப்படும்.
அப்படி என்றால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பெண்களுக்கு கிடைக்கும். தமிழக அரசு வழங்கும் ரூ.1000த்தையும் சேர்த்தால், மாதம் ரூ.9300 பெண்களுக்கு கிடைக்கும். இதெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். நாங்கள் நாட்டுக்காக தியாகம் செய்த கட்சி, 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தோம். நாங்கள் தான் டெலிகாம் கம்யூனிகேஷன் கொண்டு வந்தோம். நாங்கள் சொன்னதை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post பூசாரிகளின் பணத்தை கொள்ளையடித்த நபருக்கு பாஜவில் போட்டியிட சீட்: மோடியை வெச்சு செய்த ஆனந்த் ஸ்ரீனிவாசன் appeared first on Dinakaran.